மாதத்திற்கு 10 முறை ATM-களில் பணம் எடுக்க இலவசம் – மத்திய அமைச்சர் தகவல்!
உலகில் உள்ள வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது மற்றும் அண்டை நாடுகளில் ஏற்பட்டதைப் போன்று, இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் என மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இந்திய பொருளாதாரம்:
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் விலைவாசி உயர்வு பிரச்சினை குறித்து மாநிலங்களவையில் நேற்று விவாதம் நடந்தது. இந்த விவாதத்தை தொடங்கி வைத்த மார்க்சிஸ்ட் உறுப்பினர் கரீம் பேசியது,“கடந்த 8 ஆண்டு மோடி அரசில், அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது”என்றார். இதற்கு பதில் அளித்து பாஜக உறுப்பினர் பிரகாஷ் ஜவடேகர் பேசும்போது, “விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மோடி தலைமையிலான அரசு” தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
Exams Daily Mobile App Download
கொரோனா தொற்று, ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் உலகம் முழுவதும் உயர்ந்துள்ளது” என்றார். இதுபோல மேலும் சில எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்று பேசினர். பின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விவாதத்துக்கு பதில் அளித்து பேசியது, இந்திய ரூபாயின் மதிப்பை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணிக்கிறது. மாற்றம் ஏற்பட்டால் மட்டும் அதை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தலையிடுகிறது.
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
மேலும் மற்ற நாடுகளைப் போல், இந்தியாவில் ரூபாயின் மதிப்பு மிக மோசமாக வீழ்ச்சியடையவில்லை. இதை உறுப்பினர்கள் புரிந்துகொண்டு இந்திய ரூபாயின் மதிப்பு பற்றி பேச வேண்டும். ரூபாயின் மதிப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ரிசர்வ் வங்கியும், நிதியமைச்சகமும் ஈடுபட்டுள்ளது. பணவீக்கம் சற்று அதிகமாக உள்ளது என்பதை ஏற்கிறோம். ஆனால் அதைக் கட்டுப்படுத்த இலக்குடன் கூடிய அணுகுமுறையை மத்திய அரசு பின்பற்றுகிறது. மேலும் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு விலைகளை அரசு கட்டுப்படுத்தி உள்ளது.
அச்சகத்திலிருந்து வங்கிகள் வாங்கும் காசோலை புத்தங்களுக்குத்தான் ஜிஎஸ்டி வரி. மேலும் வாடிக்கையாளர்களின் காசோலைகளுக்கு வரி இல்லை. மேலும் வங்கி கணக்கில் இருந்து எடுக்கும் பணத்திற்கு ஜிஎஸ்டி போடுவதில்லை, மாதத்திற்கு 10 முறை ஏடிஎம்களில் இருந்து பணத்தை இலவசமாக எடுக்க முடியும் என்றார். தொடர்ந்து மருத்துவமனை படுக்கைகள், ஐசியு அறைகளுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை. நாள் ஒன்றுக்கு ரூ.5,000 வாடகை உள்ள அறைகளுக்குத்தான் வரி. வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில்தான் உள்ளது என்று கூறினார்.