தமிழக தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை – மே 18 கடைசி நாள்!
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி திட்டத்தின் மூலமாக 25 சதவிகிதம் மாணவர் சேர்க்கைக்கு மே 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
கட்டாயக் கல்வி உரிமை சட்டம்:
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பின் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வழக்கம் போல பள்ளிக்கு சென்று வருகின்றனர். பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ன் படி, சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகள் 25 சதவிகித இடங்களில் சேர 2003 ஆம் ஆண்டு அரசு உத்தரவிட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் கட்டாயக்கல்வி திட்டம் மூலமாக மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சொன்ன விளக்கம்!
அந்த வகையில் 2022-2023 கல்வியாண்டில் தனியார் மழலையர், தொடக்கப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவிகித ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க ஏற்கனவே வழிகாட்டுதல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுபான்மையற்ற தனியார் மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகள் சுயநிதி மெட்ரிகுலேசன் பள்ளிகளில் நுழைவு நிலை 25 சதவிகித மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 2 முதல் ஜூன் 12ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!
பெற்றோர்கள் அவர் அவர் இடத்தில் இருந்தே விண்ணப்பிக்க, பதிவேற்றம் செய்த விவரம், பதிவு செய்த பெற்றோர்களின் விவரம், வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் ஆகியவை பெற்றோர்களின் கைபேசி எண்ணிற்கு குறுந்செய்தியாக அனுப்பப்படும். மேலும் விண்ணப்பங்களை ஏப்ரல் 20ல் தொடங்கி மே 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.