உக்ரைனுக்கு ஆதரவு கரம் நீட்டும் பிரான்ஸ் – ரஷ்யாவுக்கு எதிராக ஒன்று கூடும் நாடுகள்! வலுப்பெறும் போர்!
மிகவும் தீவிரமாக நடைபெற்று வரும் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போரில், தற்போது உக்ரைனுக்கு ஆதரவாக பிரான்ஸ் அதிபர் போராயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை அனுப்பி இருக்கும் நிலையில். பெரிய அளவிலான போருக்கு ஆயத்தமாக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் ஆதரவு
தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு எதிரான போர் உலக நாடுகளின் தலையீட்டால் மீண்டும் வலுப்பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த 2 நாட்களாக ரஷ்யாவின் அராஜரீகத்தை தனியாக எதிர்கொண்டு வந்த உக்ரைனுக்கு தற்போது உலக நாடுகள் பலவும் ஆதரவு கரம் நீட்டி வருகிறது. இதற்கிடையில் ரஷ்யாவுடன் ஒப்பிடும் போது மிகச்சிறிய அளவிலான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை உள்ளடக்கி இருக்கும் உக்ரைன், தனது போரில் தனித்து விடப்பட்டதாக கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.
மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்? மத்திய அரசு உத்தரவு!
அதே நேரத்தில் இது எங்களுடைய நாடு. எங்களுக்கு தான் சொந்தம் என்ற உரிமையுடன் இறுதி வரை போராட்டத்தை தொடருவதாக உக்ரைனின் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கமாக குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து சில நாடுகள் உக்ரைனுக்கு தங்களது ஆதரவு கரத்தை நீட்ட முன்வந்திருக்கிறது. அந்த வகையில் இப்போது உக்ரைனுக்கு ஆதரவாக பெரியளவிலான போருக்கு தயாராக வேண்டும் என மற்ற உலக நாடுகளுக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவைத்தொகை – கோரிக்கை போராட்டம்!
அதாவது, உக்ரைனின் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவின் பிடியில் இருந்து தனது நாட்டை காப்பாற்றுவதற்காக ஆயுதங்கள் உள்ளிட்ட சில போர்த்தளவாடங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்திருக்கிறார். உக்ரைன் அதிபரின் இந்த கோரிக்கையை ஏற்ற பிரான்ஸ் அதிபர், உக்ரைனுக்கு ஆதரவாக பெரிய அளவிலான போருக்கு தயாராக வேண்டும் என்று தெரிவித்த பின்னர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டுக்கு ஆயுதங்கள் மற்றும் போர்த்தளவாடங்கள் அனுப்பி வைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.