இந்தியாவில் ஜூன் மாதம் கொரோனா நான்காம் அலை பரவல் – மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்?
இந்தியாவில், ஜூன் மாதத்தில் நான்காவது கொரோனா அலை வேகமெடுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
கட்டுப்பாடுகள்:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா என்னும் கொடிய வகை வைரஸ் தொற்று தீவிரமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மக்கள் மீண்டு வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ் வேகமெடுக்க தொடங்கியது. இந்த வைரஸ் எதிர்பாராத அளவு பாதிப்புகளை அதிகப்படுத்தியது.
அரங்கேறும் வேலன், வள்ளியின் திருமணம் – ப்ரோமோ ரிலீஸ்! எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்!
இந்த நேரத்தில் தடுப்பு பணியின் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பு பணியாக 15 வயது முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் மூன்றாம் அலை பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியது. பெரும் முயற்சியின் விளைவாக இந்த வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் மீண்டு வந்து கொண்டிருக்கும் நேரத்தில் தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.
மத்திய அரசில் NHM அமைப்பில் ஜாக்பாட் பணிவாய்ப்பு – 385 காலிப்பணியிடங்கள்..!
இதனால் நாட்டின் தற்போதைய கொரோனா பாதிப்பு 1,000 தாண்டி உள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒமைக்ரான் தொற்றின் புதிய திரிபான எக்ஸ்.இ வகை வைரஸ் ஜூன் மாதத்தில் நான்காவது கொரோனா அலை பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், நாடு முழுவதும் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.