கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் – மாநில அரசுகள் அறிவிப்பு!!
கொரோனா தடுப்பூசியின் விலை இரு மடங்கு விலை ஏற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து நான்கு மாநிலங்களில் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று மாநில அரசுகள் அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் முதல் அலை கடந்த 2020ம் ஆண்டு தொடங்கி அந்த ஆண்டின் இறுதியில் முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் அலை 2021 மார்ச் மாதம் முதல் மீண்டும் நாட்டில் பரவத் தொடங்கியது. கொரோனா பாதிப்பு கடந்த 10 நாட்களில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கொரோனா பரவத் தொடங்கிய சமயத்தில் இருந்து மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் அனைத்தும் கொரோனா தொற்றிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கியது.
தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு இன்று முதல் தொடர் விடுமுறை – செய்முறை தேர்வுகள் நிறைவு!!
தடுப்பூசிகள்:
இந்தியாவில் கொரோனா தொற்றிற்கு எதிராக கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் என்ற இரண்டு வகையான தடுப்பூசிகள் போடப்படுகிறது. முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசிகள் நாட்டில் உள்ள முன்களப் பணியாளர்களுக்கு மட்டும் போடப்பட்டது. தற்போது பிரதமர் மோடி அவர்கள் வரும் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
விலை ஏற்றம்:
இந்நிலையில் சீரம் நிறுவனம் ரூ.250 விற்ற தடுப்பூசியின் விலையை தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600க்கும், மாநில அரசுகளுக்கு ரூ.450க்கும் விலையேற்றம் செய்துள்ளது. இதனால் பொதுமக்கள் பதற்றம் அடைந்தனர். தற்போது கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் பீஹார் மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அறிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்