தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை – அதிரடியாக வந்த அறிவிப்பு! காரணம் என்ன?

0
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை - அதிரடியாக வந்த அறிவிப்பு! காரணம் என்ன?
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை - அதிரடியாக வந்த அறிவிப்பு! காரணம் என்ன?
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை – அதிரடியாக வந்த அறிவிப்பு! காரணம் என்ன?

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்பட நிலையில் நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி வழங்காமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூன் 7 முதல் 10ஆம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த நான்கு நாட்கள் ரேஷன் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகள் விடுமுறை:

கொரோனா பரவல் காரணமாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் ஏற்கனவே நிலுவையில் உள்ள அகவிலைப்படி நிலுவைத்தொகை மற்றும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. மறுபடியும் ஜூலையிலும் 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இந்த உயர்வு தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு போராட்டங்கள் நடத்தப்பட்டது.

ஜூன் மாதம் திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – சிறப்பு டோக்கன் வழங்கும் தேதி அறிவிப்பு!

அதன் படி கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. மீண்டும் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17 சதவிகிதத்தில் இருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கப்பட்டது. ஆனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மட்டும் இந்த அகவிலைப்படி வழங்கப்படவில்லை. ரேஷன் கடை ஊழியர்களுக்கும் அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நாகையில் நடைபெற்றது.

Exams Daily Mobile App Download

அதில் அகவிலைப்படி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்த இருப்பதாக ஒருமனதாக முடிவு செய்தனர். இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க போராட்டக்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கு.பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜுன் 10-ந் தேதி மாநிலம் முழுவதும் பணியாளர்களைத் திரட்டி, சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்திப்பதற்கான காத்திருப்பு போராட்டம் நடத்த இருப்பதாகவும், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தோடு இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஜுன் மாதம் 7, 8, 9 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளார். அதனால் ஜூன் 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை ரேஷன் கடைகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!