பிப்.21ம் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி – அரசு முக்கிய உத்தரவு!
ஆஸ்திரேலியா நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் அச்சம் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள்:
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் பரவி அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா நோய் தொற்றானது அதிக வேகத்தில் மனிதர்கள் மத்தியில் பரவி பாதிப்புகளையும், அதிக இறப்புகளையும் பதிவு செய்து வந்தது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வந்தது. ஆனால் கொரோனா தொற்றானது முதல் அலை, இரண்டாம் அலை என்று மாறி மாறி வேகமெடுத்து வந்தது.
அண்ணா பல்கலை மாணவர்களுக்கு நேரடி முறையில் தேர்வு – முக்கிய அறிவிப்பு!
கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன், மற்ற நாடுகளுடன் உள்ள போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.அதே போல் நாட்டின் எல்லைகளை மூடி, மற்ற நாட்டை சேர்ந்தவர்கள் வருகையையும், சுற்றுலா பயணிகள் வருகையையும் தடை செய்தது. இதேபோல், ஆஸ்திரேலியா நாட்டில் பரவி வந்த கொரோனா பாதிப்பு காரணமாக அங்கு 2020மார்ச் முதல் சுற்றுலா பயணிகள் வருகை தடை செய்யப்பட்டிருந்தது.
TN TRB தேர்வர்கள் கவனத்திற்கு – இலக்கண (Grammar) ஆன்லைன் வகுப்புகள்..!
தற்போது பாதிப்புகள் ஆஸ்திரேலியாவில் குறைந்து வருவதை முன்னிட்டு அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இதனால் வரும் பிப்ரவரி 21ம் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகள் கட்டாயம் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.