இந்தியாவில் 3,295 வெளிநாட்டு நிறுவனங்கள் – நிதியமைச்சர் அறிக்கை!

0
இந்தியாவில் 3,295 வெளிநாட்டு நிறுவனங்கள் - நிதியமைச்சர் அறிக்கை!
இந்தியாவில் 3,295 வெளிநாட்டு நிறுவனங்கள் – நிதியமைச்சர் அறிக்கை!

இந்தியாவில் தற்போதைக்கு 3,295 வெளிநாட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், இது தொடர்பான விவரங்களையும் பகிர்ந்துள்ளார்.

வெளிநாட்டு நிறுவனம்:

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று வேலைபார்க்கும் காலம் மாறி வெளிநாட்டு நிறுவனங்களே இந்தியாவிற்கு அதிகளவில் வர துவங்கிவிட்டன. இந்திய நிறுவனங்களை காட்டிலும் வெளிநாட்டு நிறுவனங்களில் பதவி உயர்வு , சம்பள உயர்வு, போனஸ் என எக்கச்சக்கமான சலுகைகள் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதால் இளைஞர்கள் அனைவரும் வெளிநாட்டு நிறுவனங்களில் சேருவதற்கு தான் ஆர்வம் காட்டி வருகின்றனர். இளைஞர்களின் ஆர்வத்தை அறிந்து இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே இருக்கிறது.

TNUSRB SI 2023 தேர்வுக்கான Best Online Classes – நீங்கள் விரைவில் காக்கிச்சட்டை அணியலாம்!

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற மக்களை கூட்டத்தில் இந்தியாவில் செயல்பட்டுவரும் வெளிநாட்டு நிறுவனங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். அதாவது, கிட்டத்தட்ட வெளிநாடுகளை சேர்ந்த 3,295 நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் நடத்தி வருவதாக அறிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களின் துணை நிறுவனங்களான 14,173 நிறுவனங்களும் இந்தியாவில் தொழில் நடத்தி வருவதாக அறிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!