இந்திய விமானப்படையில் சேர விரும்புவோர் கவனத்திற்கு – ஜுன் 24 முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்திய ராணுவத்தில் ஆட்கள் சேர்ப்பதற்கான அக்னிபாத் திட்டத்தை மக்கள் எதிர்த்து வரும் நிலையில் விமான படையில் சேர்வதற்கான விண்ணப்பபதிவுகள் நடைபெற்று வருகிறது. விருப்பமுடையவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்கள் சேர்ப்பு:
இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் 4 ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர்கள், இளம்பெண்களை சேர்க்கும் அக்னிபாத் எனும் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் இணைபவர்கள் 4 ஆண்டுகள் பணி புரிவார்கள். அதன் பின்னர் அவர்களில் 75% பேர் ராணுவத்தில் இருந்து வெளியேறுவர். மீதமுள்ளவர்களில் 25% பேர் மட்டுமே ராணுவ பணியில் தொடர்ந்து இருப்பர். மத்திய அரசின் இந்த அறிவிப்பு ராணுவத்திற்குத் தயாராகும் வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் அக்னிபாத் வீரர்கள் என்ன செய்வார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்த திட்டத்தை எதிர்த்து அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. உயரமான இடங்களில் பாதுகாப்பு பணியில் வயதானவர்கள் ஈடுபடுவதால் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்கவே இளைஞர்களை பணியமர்த்த அக்னிபாத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் 4 வருடங்களுக்கு பிறகு வெளியேறும் வீரர்களுக்கு துணை ராணுவப் படை, விமான போக்குவரத்துத் துறை உள்ளிட்டவற்றில் அக்னிபாத் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஜூன் 27ம் தேதி அமைச்சரவை கூட்டம் – முக்கிய ஆலோசனை!
நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில் அக்னிபத் திட்டத்தின் கீழ், இந்திய விமானப் படையில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு ஜூன் 24ம் தேதி முதல் தொடங்க உள்ளது. https://careerindianairforce.cdac.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடையவர்கள் ஜூலை 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜூலை 24ம் தேதி ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என்று விமானப்படை அறிவித்துள்ளது.