பொறியியல் படிப்பில் சேர விரும்புவோர் கவனத்திற்கு – கட் ஆப் மதிப்பெண் குறித்த விவரம் வெளியீடு!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவுகள் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழக உயர்கல்வித்துறை முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
கட் – ஆப் மதிப்பெண்:
தமிழகத்தில் கடந்த ஜூன் 20ம் தேதி அன்று 10,12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதன்படி, தேர்வு எழுதிய மாணவர்களில் மொத்தம் 93.76% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் 12ம் வகுப்பில் மொத்தம் 7.55 (93%) லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஜூன் 24ம் தேதி முதல் பள்ளிகளில் மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெறுதல் போன்றவற்றிற்கான அறிவிப்புகளும் வெளியாகி உள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் கல்லூரிகளில் 2022 – 2023ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. கலை & அறிவியல் கல்லூரிகளை தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பபதிவுகள் நடைபெற்று வருகிறது. https://www.tneaonline.org/ என்ற இணையதளம் மூலம் ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ள கல்லுாரிகள், பாடப்பிரிவுகள் ஆகியவை குறித்தும், இட ஒதுக்கீடு விதிகள் குறித்தும் இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அக்னிபாத் திட்டம்: வீரர்களுக்கு வீரதீர செயல்களுக்கான விருதுகள் – பாதுகாப்புத்துறை அறிவிப்பு!
தற்போது கடந்த 5 ஆண்டுகளின் கட் – ஆப் மதிப்பெண் விவரங்களை உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் கலந்தாய்வில் கல்லுாரிகளை தேர்வு செய்ய இந்த கட் ஆப் மதிப்பெண்கள் உதவியாக இருக்கும். இன்ஜினியரிங்கில் தங்களுக்கு எந்த கல்லூரியில், எந்த பாடப்பிரிவு கிடைக்கும் என்ற உத்தேச நிலையை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த கட் ஆப் மார்க் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கல்லூரி மற்றும் பாடப் பிரிவை தேர்ந்தெடுக்கலாம். இந்த ஆண்டு 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. அதனால் கட் ஆப் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.