அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.62000 சம்பளத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழகத்தில் உள்ள மதுரை மண்டலத்தை சேர்ந்த அஞ்சல் அலுவலகத்தில் வேலைவாய்ப்புகளை தெரிவித்துஇருப்பதாக தபால் துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனால் தகுதியானவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு:
தமிழ்நாட்டில் பரவி வந்த கொரோனா ஊரடங்கின் காரணமாக தமிழக அரசு பல வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது ஊரடங்கின் நிறைய தளர்வுகளை விடுத்துள்ளது அரசு. அதன் காரணமாக சமீபத்தில் tnpsc குரூப் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் குறித்த பல தகவல்களை அறிவித்துள்ளது. அதன் மூலம் நிறைய பட்டதாரிகள் பயன் பெற்று கொள்ளலாம் என்பதால் இந்த அறிவிப்பை அரசு தெரிவித்து உள்ளது. மேலும் இது இதுதவிர பல வேலைவாய்ப்புகளையும் தமிழக அரசு தெரிவித்து வருகிறது.
ExamsDaily Mobile App Download
இந்த நிலையில் தற்போது அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு வட்டம், மதுரை மண்டலத்தைச் சேர்ந்த திண்டுக்கல், காரைக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் காலியாக உள்ள கார் டிரைவர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதை பார்த்து தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளனர். மேலும் இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதியாக மே மாதம் 21 ஆம் தேதி என்றும் அறிவித்து உள்ளனர்.
இரட்டிப்பாகும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் – நகர நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!
இந்த நிலையில் காலியாக உள்ள பணியிடத்தின் பெயர் கார் ஓட்டுநர் என்றும் அதற்கான காலியிடங்களின் எண்ணிக்கையாக 4 என்றும், அடுத்தாக, காலியிட விவரம் திண்டுக்கல் – 1, காரைக்குடி -1, இராமநாதபுரம் -1, சிவகங்கை- 1 என்றும், அதற்கான கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என்றும் கார் ஓட்டுவதற்கு லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.அதை தொடர்ந்து , வயது தகுதியாக 56 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளனர். மேலும் இந்த வேலைக்கு சம்பளமாக ரூபாய் 18,000 முதல் 62,000 வரை பெறலாம் என்றும் கூறியுள்ளனர். அதனால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்து உள்ளனர்.