ஆதார் & பான்கார்டு இணைக்காதவர்கள் கவனத்திற்கு – ஜூலை 1ம் தேதிக்கு மேல் ரூ.1000 அபராதம்!
இந்தியாவில் ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இதற்கான கால அவகாசம் கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் இப்போது உங்கள் பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.
ஆதார் பான் இணைப்பு:
இந்தியாவில் இந்திய குடிமகனின் அடையாள ஆவணங்களுள் ஒன்றாக ஆதார் கார்டு கருதப்படுகிறது. தற்போது அனைத்து செயல்பாடுகளுக்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. இந்த ஆதார் கார்டுடன் பான் அட்டையை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாததாக மாறிவிடும் என்று CBDT எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது ஆதார் – பான் இணைப்பை மேற்கொள்வதற்கு மார்ச் 31ம் தேதிக்குள் இணைத்திருக்க வேண்டும். ஆனால் இந்த முறை அபராதத்துடன் இணைக்க வேண்டியிருக்கும். இந்த முறையும் இணைக்கப்படவில்லையெனில் பான் கார்டு செல்லாததாக மாறிவிடும் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து 272N பிரிவின் படி வருகிற ஜூன் 30க்குள் ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைக்க ரூ.500 அபராதமாக செலுத்த வேண்டும். இதே போல் ஜூலை 1 ம் தேதிக்கு மேல் இணைக்க வேண்டுமென்றால் ரூ.1000 செலுத்த வேண்டும்.
நாட்டில் உள்ள பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – மத்திய அரசின் புதிய அறிவிப்பு!
இதனை தொடர்ந்து ஜூன் 30ம் தேதிக்குள் ஆதார்-பான் கார்டு இணைக்க ITNS 280 (மேஜர் ஹெட் 0021) என்ற செலான் எண்ணைப் பயன்படுத்தி ரூ.500 செலுத்தி இணைக்கலாம். இதையடுத்து ஜூலை 1ம் தேதிக்கு மேல் ஆதார்-பான் கார்டு இணைப்பதற்கு ITNS 280 என்ற செலான் எண்ணைப் பயன்படுத்தி ரூ.1000 அபராத தொகையை செலுத்தி இணைத்து விடலாம். அதனால் இதுவரை ஆதாருடன் பான் எண்ணை இணைக்காதவர்கள் விரைவில் சென்று இணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அத்துடன் வருகிற ஜூன் 30ம் தேதிக்குள் நீங்கள் இணைக்கவில்லையெனில் அடுத்து ரூ.1000 அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.