திருப்பதி செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – தேவஸ்தானத்தின் சூப்பரான அறிவிப்பு!
ஆந்திர மாநிலத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பக்தர்கள் 7 முதல் 8 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்கள் கவனத்திற்கு
ஆந்திர மாநிலத்தில் உள்ள உலக புகழ்பெற்ற திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். அதனால் கொரோனா கால கட்டத்தில் பக்தர்களின் வருகையை குறைக்க பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டது. இதில் குறிப்பாக நேரடி தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பக்தர்களுக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைன் முறையில் வெளியிட்டு இதனை முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
ExamsDaily Mobile App Download
இப்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால் பல்வேறு தளர்வுகளை தேவஸ்தானம் வழங்கி வருகிறது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இலவச நேரடி தரிசன டிக்கெட்டுகளை வழங்குகிறது. அத்துடன் பக்தர்களின் வருகை அதிகரிக்கும்போது டிக்கெட்டுகளை வழங்காமல் நேரடியாக சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தற்போது கொரோனா பரவலின் தாக்கம் குறைந்துள்ளதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஒரு நாள் தினசரி பக்தர்களின் எண்ணிக்கை 70000த்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – புதுப்பிப்பதற்கான வழிமுறைகள் இதோ!
அதனால் பக்தர்கள் 7 முதல் 8 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். அதன் காரணமாக பக்தர்களின் நலன் கருதி பல்வேறு வசதிகளை தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக வைகுண்டம் காத்திருப்பு அறைகள், பக்தர்கள் தங்கும் மண்டபங்கள் உடனடியாக சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் தொடர் விடுமுறை நாட்களில் வி.ஜ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காத்திருப்பு அறைகளில் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது திருமலை அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.