தமிழகத்தில் ரயிலில் பயணம் செய்ய உள்ளவர்கள் கவனத்திற்கு – தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் ரயிலில் பயணம் செய்ய உள்ளவர்கள் கவனத்திற்கு - தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் ரயிலில் பயணம் செய்ய உள்ளவர்கள் கவனத்திற்கு - தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் ரயிலில் பயணம் செய்ய உள்ளவர்கள் கவனத்திற்கு – தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் உள்ள தெற்கு ரயில்வேயில் முக்கிய ஒன்றாக கருதப்படும் பெங்களூர் – நாகர்கோவில் விரைவு ரயில். தற்போது இந்த ரயில் சேவையில் திடீரென மாற்றம் செய்து இருப்பதாக இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.

ரயில்வே துறை

தமிழகத்தின் தென்னக ரயில்வே சார்பில் பல ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த ரயில் பயணம் பொதுமக்களுக்கு மிகவும் வசதியாக இருந்து வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிகமாக இருந்த நேரத்திலும் ரயில்வே துறை தொடர்ந்து தங்களின் பங்கை அளித்து வந்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ரயில் சேவைகள் விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து சேலம் மாவட்டத்திலும் இந்த சேவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தென்மாவட்ட ரயில் பயணிகளின் வசதிக்காக நாகர்கோவில்-பெங்களூர்-நாகர்கோவில் விரைவு ரயில் பெங்களூரு அருகே உள்ள கார்மேலாரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த ரயில் கார்மேலாரம் ரயில் நிலையத்திற்கு மாலை 5.39 மற்றும் காலை 7.29 மணிக்கு வந்து சேர்ந்து மாலை 5.40 மற்றும் காலை 7.30 மணிக்கு புறப்படும் என்றும் இந்த வசதி கடந்த ஏப்ரல் 15 முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை 6 மாதத்திற்கு பரிசோதனையின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் அதனை தொடர்ந்து தென்மாவட்ட பயணிகள் போக்குவரத்து நெருக்கடி நிறைந்த பெங்களூர் சென்று சுற்றி வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்து உள்ளனர்.

SBI வங்கியில் ரூ. 27 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு – தகுதி, விண்ணப்ப முறை உள்ளிட்ட விவரங்கள் இதோ!

மேலும் இந்த ரயில் திருநெல்வேலி-நாகர்கோவில் பிரிவில் வள்ளியூர்-ஆரல்வாய்மொழி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு வேலை நடக்க உள்ளது. அதன் காரணமாக, அந்த பகுதியில் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி – திருவனந்தபுரம் – திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில் (22627/22628) சென்ற ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 29ம் தேதி வரை திருநெல்வேலி – திருவனந்தபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்றும் தெற்கு ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!