தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – துணைத்தேர்வு குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு!

0
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - துணைத்தேர்வு குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு!
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - துணைத்தேர்வு குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு!
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – துணைத்தேர்வு குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு!

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20-ந்தேதி வெளியானதை தொடர்ந்து, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள், மேலும் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முக்கிய உத்தரவு:

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு S.S.L.C பொதுத்தேர்வு முடிவுகள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களால் கடந்த ஜூன் 20ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடப்பட்டது. அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், வெற்றி,தோல்வி என்கிற மனப்பான்மை மாணவர்களிடம் இருக்க கூடாது என்று கூறினார். மேலும் 12ம் வகுப்பில் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.36 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Exams Daily Mobile App Download

10ம் வகுப்பில் 90.7 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 9,12,620 பேர் தேர்வு எழுதிய நிலையில் 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களில் 85.8 % பேரும் மாணவிகளில் 94.4% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்ச்சியை பொறுத்தவரை கடந்த 4 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளது. அதேவேளையில் 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – ஜூலை மாதம் நேர்காணல்!

மேலும் 10ம் வகுப்பு தேர்வை 42,519 மாணாக்கர்களும் 12ம் வகுப்பு தேர்வை 31,034 மாணாக்கர்களும் எழுதவில்லை. மொத்தமாக 73,553 மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வை எழுதவில்லை. இதேபோல் 10ம் வகுப்பு தேர்வில் 90,626 மாணவ- மாணவிகளும், 12ம் வகுப்பு தேர்வில் 50,279 மாணவ- மாணவிகளும் தேர்ச்சி பெறவில்லை என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள், மேலும் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அதன்படி, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பின் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.மேலும் 12-ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நடைபெறும் என்றும் 11ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2 முதல் 10-ம் தேதி வரை நடைபெறும் என்றும் 10ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2 முதல் 8-ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!