இரவில் தனியாக பயணிக்கும் பெண்களின் கவனத்திற்கு – புதுவை அரசின் அதிரடி முடிவு!
புதுச்சேரியில் நடந்து வந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று உள்துறை அமைச்சர் அரசின் பல புதிய புதிய திட்டங்களையும் அறிவித்துள்ளார். அதில், இரவில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சூப்பர் திட்டம் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டம்:
புதுச்சேரி சட்டப்பேரவையில் சமீபத்தில் நடப்பாண்டிற்கான பட்ஜெட் தாக்குதல் செய்யப்பட்டது. இதன்பின்னர், தொடர்ந்து கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முடிவடைந்துள்ளது. தொடர்ந்து அரசின் அனைத்து துறைகள் ரீதியிலான விவாதங்களும், திட்டங்களும் அறிவிக்கப்பட்டு வந்தது. இதனால் கூட்டத்தொடரின் அறிவிப்புகள் குறித்து மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வந்தனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 1,568 பேருக்கு கொரோனா உறுதி – சுகாரத்துறை அறிக்கை!
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் துறை சார்ந்த பல அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதன்படி, புதுவையின் அனைத்து காவல் நிலையங்களும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் 9 கிராமங்களில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும் என்றும், கிராம புறங்களில் உள்ள சிறு விளையாட்டு அரங்கங்கள் சீரமைக்க 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறினார்.
TN Job “FB Group” Join Now
மேலும், கல்வி நிலையங்களில் 2019-2020ஆம் ஆண்டு கல்வி கட்டண நிர்ணயக்குழு விதித்த கட்டணத்தில் கொரோனா காரணமாக 75 சதவீதம் மட்டுமே கட்டினால் போதும் என்றும், சமூக வலை தளங்கள் மூலம் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வெளியூர்களில் இருந்து தனியாக பயணம் செய்து வரும், பெண்களுக்கு உதவி தேவைப்பட்டால் 112 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் அவரை பெண் காவலர்கள் அவர்கள் போகும் இடத்து அழைத்து சென்று விடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.