திருப்பதி தரிசனம் செல்வோர் கவனத்திற்கு – உண்டியல் வசூல் குறித்த விபரங்கள் வெளியீடு!

0
திருப்பதி தரிசனம் செல்வோர் கவனத்திற்கு - உண்டியல் வசூல் குறித்த விபரங்கள் வெளியீடு!
திருப்பதி தரிசனம் செல்வோர் கவனத்திற்கு - உண்டியல் வசூல் குறித்த விபரங்கள் வெளியீடு!
திருப்பதி தரிசனம் செல்வோர் கவனத்திற்கு – உண்டியல் வசூல் குறித்த விபரங்கள் வெளியீடு!

ஆந்திர மாநிலத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி கோவிலில் உள்ள ஏழுலையானை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பகதர்கள் வருகை புரிகின்றனர். மேலும் மிகப்பெரிய பணக்கார கோவிலாக இக்கோவில் கருதப்படுகிறது. அதன்படி தற்போது திருப்பதி கோவிலில் இந்த மாத தொடக்கத்தில் உண்டியலில் வசூலாகி உள்ள தொகையை பற்றி விரிவாக பார்ப்போம்.

திருப்பதி

ஆந்திர மாநிலத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெளிநாடுகளிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வருகை புரிவார்கள். அதனால் கொரோனா கால கட்டத்தில் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த இலவச தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மட்டுமே இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனை முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

Exams Daily Mobile App Download

அதனால் கிராமப்புறங்களில் உள்ள பக்தர்களுக்கு இந்த வாய்ப்பு அரிதாகவே கிடைத்தது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து மத்திய அரசு கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானமும் பக்தர்களுக்கு அமல்படுத்திய பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகளை அளித்து வருகிறது. அதன்படி தற்போது இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சமயத்தில் சில நேரங்களில் டிக்கெட் வழங்கப்படாமல் நேரடியாக சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? – சுகாதாரத்துறை செயலாளர் பதில்!

அதன்படி தற்போது ஏழுமலையானை தரிசிப்பதற்காக கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். அத்துடன் உலக பணக்கார கடவுளாக கருதப்படும் ஏழுமலையான் கோவிலில் இந்த 4 நாட்களில் உண்டியல் வசூல் கோடிக்கணக்கில் வந்துள்ளது. அதன்படி மே 1ம் தேதியில் 4.70 கோடி ரூபாயும், மே 2ம் தேதியில் 4.60 கோடி ரூபாயும், மே 3ம் தேதியும் 4.06 கோடி ரூபாயும் வசூலியாகியுள்ளது. அத்துடன் நேற்று திருப்பதி கோவிலுக்கு கோயிலுக்கு 69,603 பக்தர்கள் வந்துள்ள நிலையில் உண்டியல் வசூல் 3.84 கோடி ரூபாய் வசூலியாகியுள்ளது. அதன்படி இந்த 4 நாட்களில் மொத்தமாக 17.2 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!