தமிழகத்தில் 10ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதவிருப்போர் கவனத்திற்கு – ஹால் டிக்கெட் வெளியீடு!
தமிழகத்தில் கடந்த மே மாதம் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. அதன் முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகி உள்ள நிலையில் அடுத்த கட்டமாக 10-ம் வகுப்பு துணைத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகி உள்ளது.
ஹால் டிக்கெட்:
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 வருடங்களுக்கு பிறகு 2022 – 2023 ம் கல்வியாண்டில் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. தேர்வானது கடந்த மே மாதம் பள்ளிக்கல்வித்துறையின் கால அட்டவணை படி சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஜூன் 20ம் தேதி அன்று வெளியானது. இதில் 12ம் வகுப்பில் மொத்தம் 7.55 (93%) லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அடுத்ததாக 10ம் வகுப்பில் 90.7 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 9,12,620 பேர் தேர்வு எழுதிய நிலையில் 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
ஆனால் கடந்த 4 ஆண்டுகளை ஒப்பிடும் போது 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் இந்தாண்டு குறைந்துள்ளது. அதே நேரம் 12ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. மற்றொரு புறம் தேர்வு எழுதாத மாணவர்கள் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்வில் 10ம் வகுப்பு தேர்வில் 42,519 மாணவர்களும், 12ம் வகுப்பு தேர்வை 31,034 மானவர்களும் எழுதவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கான துணைத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. அதில் 12ம் வகுப்புகளுக்கு ஜூலை 25ம் தேதியும், 10ம் வகுப்பிற்கு ஆகஸ்ட் 2ம் தேதியும் துணைத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
விமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – இனி ‘இந்த’ கட்டணம் இல்லை!
இந்த நிலையில் இன்று 10ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஹால் டிக்கெட் இல்லாமல் எந்தவொரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அறிவியல் பாட செய்முறைத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் வரும் ஜூலை 26-ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடத்தப்படும் செய்முறைத் தேர்வில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.