தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் இனிமேல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்வதை தடுக்க சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்த முழு விவரத்தையும் கீழே பார்ப்போம்.
தமிழக பேருந்துகள்:
தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் தங்கள் தேர்தல் வாக்கு உறுதியில் பல திட்டங்களை செயல்படுத்த இருப்பதாக தெரிவித்து இருந்தது. அதில் முக்கியமாக, பெண்களுக்கு இலவச பேருந்து திட்டமும் உள்ளது. அதனை ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வர் முதலில் போடப்பட்ட 5 கையெழுத்தில் மகளிருக்கு உள்ளூர் பேருந்துகளில் இலவச பயணத் திட்டமும் ஒன்று. இத்திட்டத்தின் மூலம் கிராமம், நகரம், பெருநகரம் என நாளொன்றுக்கு சுமார் 5 லட்சம் பெண்கள் பயன்பெறுகின்றனர். இதன் மூலம் பெண்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றனர்.
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் ரூ.39,100 சம்பளத்தில் பணிவாய்ப்பு..!
இந்த நிலையில் தற்போது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அது என்னவென்றால், சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்வதை தடுக்க சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ் வழித்தடங்களில் சோதனை நடத்தி, படியில் பயணம் செய்யும் மாணவர்களை பிடித்து போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
TN TRB தமிழக அரசு பள்ளிகளில் 9,000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
இந்நிலையில் இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தால் மாணவர்கள் மீது தகுந்த வழக்குகள் பதியப்படும் என்று போக்குவரத்து காவல் துறையினர் எச்சரித்துள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர், பிள்ளைகளை அழைத்துச் செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு போன்று மாணவர்களின் விபத்தில்லா பாதுகாப்பான பயணம் மூலம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.