தமிழக மக்களின் கவனத்திற்கு.. நாளை மாநிலத்தில் மின்தடை – முழு விவரம் உள்ளே!
மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதி துணை மின் நிலையத்தில் நாளை (அக்.12) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு குறிப்பிட்ட நேரம் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்தடை குறித்து அந்தந்த பகுதி மின்வாரிய செயற் பொறியாளர்கள் முன்னதாகவே அறிவிப்பும் செய்து வருகின்றனர். இதனால் மின் பயனர்கள் மின்சாரம் கொண்டு செய்ய வேண்டிய வேலைகளை முதல் நாளே செய்து முடித்து கொள்கின்றனர். இந்த பராமரிப்பு பணிகளின் போது மின் விநியோக பாதைகளுக்கு இடையூறாக உள்ள மரங்கள் அவற்றின் மர கிளைகள் வெட்டப்படுகிறது.
அதனை தொடர்ந்து பழைய மின் கம்பிகளை மாற்றுதல், பழுதான மின் இணைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை (12.10.2022) மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
கொட்டப்போகும் கனமழை.. இந்த 16 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்!
Exams Daily Mobile App Download
அதனால் அந்த துணைமின் நிலையத்திற்கு உள்பட்ட பிரவியம்பட்டி,கொசவபட்டி, பூசாரிப்பட்டி, அய்யங்கோட்டை காா்னா், டபேதார் சந்தை, எழுவம்பட்டி, வடுகப்பட்டி, திருவாலவாயநல்லூர், நகரி சாலை, ஜோதி மாணிக்கம்கொடிக்குளம், உடன் காட்டுப்பட்டி ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படவுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்