தமிழகத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியில் மாற்றம்!
தேர்வு முடிவுகள்:
கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து முடி செய்யப்பட்டு படியாக பள்ளிகள் மீண்டும் திறக்க ஆரம்பித்தது. வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த வருடம் கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். அதன்படி கால அட்டவணை தயார் செய்யப்பட்டு கடந்த மே மாதம் பொதுத்தேர்வு தொடங்கியது. 12ம் வகுப்பிற்கும் 10ம் வகுப்பிற்கு மே 6ம் தேதியும் தேர்வு தொடங்கி மே 31ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வுகள் முடிவடைந்தது அடுத்து ஜூன் 17ம் தேதி 10ம் வகுப்பிற்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
கடந்த மே மாதம் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழகத்தில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வின் விடைத்தாளை மதிப்பீடு செய்யும் பணி கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற்றது. பிறகு விடைத்தாள் திருத்தும் பணியும் முடிவடைந்து மதிப்பெண் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்றது. தேர்வுத்துறையின் இணையதளங்களில் பதிவேற்றும் பணி நிறைவு பெற்றுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது. திட்டமிட்டபடி நாளை (ஜூன் 17) காலை 10 மணிக்கு www.dge.tn.gov.in இணையதளத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து 10ம் வகுப்பு தேர்வு முடிகள் நாளை வெளியாகும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூன் 20ம் தேதி காலை 10.00 மணிக்கு பள்ளிகல்வித்துறை அமைச்சர் 10ம் வகுப்பு தேர்வு முடிவை வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்பார்ப்பில் இருந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தற்போது 10ம் வகுப்பு தேர்வு முடிவு தேதி தள்ளி போவதால் 11ம் வகுப்பிற்கு பள்ளிகள் திறப்பு தாமதமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.