தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 2 முதல் விடைத்தாள் திருத்தம்!

0
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு - ஜூன் 2 முதல் விடைத்தாள் திருத்தம்!
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு - ஜூன் 2 முதல் விடைத்தாள் திருத்தம்!
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 2 முதல் விடைத்தாள் திருத்தம்!

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 6ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கியது. இத்தேர்வானது மே 31ம் தேதி வரை நடைபெறும். அதனை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 2 முதல் தொடங்கும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

விடைத்தாள் திருத்தம்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்த பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. கடந்த வருடம் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக 10, 11 &12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. நடப்பாண்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். அதன்படி பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு வகுப்பு வாரியாக கால அட்டவணை வெளியானது. மேலும் பள்ளிகள் வெகு நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் சுமையை கருத்தில் கொண்டு பாடத்திட்டம் குறைக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

அதாவது குறைக்கப்பட்ட பாடத்தில் இருந்து மட்டுமே பொதுத்தேர்வுக்கு வினாக்கள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் விரைந்து பாடங்களை நடத்தி முடிக்க சனிக்கிழமைகளும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் 2ம் தேதி திட்டமிட்ட கால அட்டவணையின் படி 1 – 9 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு தொடங்கி மே 13ம் தேதி வரை நடைபெற்றது. பிறகு மே 14 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. மீண்டும் பள்ளிகள் ஜூன் 14ம் தேதி அன்று திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

CSIR நிறுவனத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

ஆனாலும் 1 – 9 வரையிலான வகுப்பு ஆசிரியர்கள் மே 20ம் தேதி வரை பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. ஏனெனில் எம்மிஸ், விடைத்தாள் திருத்தும், மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்ற வகுப்புகளை தொடர்ந்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 5ம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்கியது. தற்போது நடைபெற்று வரும் பொதுத்தேர்வு மே 31ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். இந்த நிலையில் 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெறும் என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!