தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கவனத்திற்கு – முக கவசம் கட்டாயம்!
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வு கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் மே மாதம் பொதுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
பொதுத்தேர்வு அறிவிப்பு:
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் மூன்று அலைகளில் சிக்கி மக்கள் தவித்து வருகின்றனர். மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 10,11,12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாக இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு தான் கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியது. அரசின் துரித நடவடிக்கையாலும், மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் காரணமாக கொரோனாவின் வீரியம் குறைந்துள்ளது.
Exams Daily Mobile App Download
தற்போது அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் எனவும் அதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மே மாதம் 6 ஆம் தேதி முதல் மே மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 மாதம் ஆம் தேதி தொடங்கி மே மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மே மாதம் 5 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 28 ஆம் தேதி முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் எச்சரிக்கை அறிவிப்பு – ஆதாரை இணைக்க ஜூன் 30 கடைசி நாள்!
மேலும் மாணவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு பின் தேர்வுகள் நடைபெற இருப்பதால் தீவிரமாக படித்து வருகின்றனர். தற்போது மாணவர்கள் செய்முறைத் தேர்வு எழுதி வருகின்றனர். மாநிலம் முழுவதும் சுமார் 30 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் இருக்குமா என்பது குறித்து பெற்றோர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். தற்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.