1 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – காலை 7 மணிமுதல் மாலை 5:15 வரை பள்ளிகள் திறப்பு!
பஞ்சாப் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கோடை விடுமுறை முடிந்து வகுப்புகளை மீண்டும் திறக்கும் போது மாணவர் பலம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் காலை 7 மணி முதல் மாலை 5:15 மணி வரை இரட்டை ஷிப்ட்களில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டு ஷிப்ட்கள்
மாநிலத்தில் தற்போது நிலவி வரும் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு மே மாதம் 14ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறையை அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையில், பள்ளிகளில் கோடை விடுமுறை முடிந்து வகுப்புகளை மீண்டும் திறக்கும் போது மாணவர் பலம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் இரட்டை ஷிப்ட்களில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பஞ்சாபின் கல்வித் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, ‘மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பள்ளிகளை, இரட்டை ஷிப்டுகளில் நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
Exams Daily Mobile App Download
இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர், மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குநர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவின்படி, மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பட்சத்தில் இடப்பற்றாக்குறை, அறைகள் மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பள்ளிகளை இரட்டை ஷிப்டில் நடத்தலாம். மேலும், தொடக்க மற்றும் மேல்நிலை வகுப்புகளை ஒரு வளாகத்தில் இயக்கும் பள்ளிகளும் இரு பள்ளிகளின் தலைவர்களின் ஒப்புதலுடன் இரட்டை ஷிப்டுகளில் நடத்தப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.
Central Bank of India வாடிக்கையாளர்களுக்கு ஷாக் அறிவிப்பு – கிளைகளை மூட முடிவு!
அந்த வகையில் கோடை காலத்தில் பள்ளிகளுக்கான, முதல் ஷிப்டின் நேரம் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், இரண்டாவது ஷிப்டின் நேரம் மதியம் 12:30 முதல் மாலை 5:30 மணி வரையிலும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் குளிர்காலத்தில், முதல் ஷிப்டின் நேரம் காலை 7:30 முதல் மதியம் 12:15 வரையிலும், இரண்டாவது ஷிப்டின் நேரம் மதியம் 12:30 முதல் மாலை 5:15 வரையிலும் இருக்கும். இதற்கிடையில், மாநில அரசின் இந்த தற்காலிக நடவடிக்கைக்கு பதிலாக மாணவர்கள் அதிகம் உள்ள இடங்களில் புதிய பள்ளிகளை திறக்க வேண்டும் என்று ஜனநாயக ஆசிரியர் முன்னணியின் தலைவர் விக்ரம் தேவ் சிங் கூறி இருக்கிறார்.