தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – பொதுமக்களுக்கு அரசு வைத்த செக்!
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மாதந்தோறும் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும். ஆனால் தொடர்ந்து ஆறு மாதம் பொருட்களை வாங்காமல் இருந்தால் தங்களின் ரேஷன் அட்டைகளை ரத்து செய்து விடுவார். இவ்வாறு ரத்து செய்யப்பட்ட கார்டுகளை மீண்டும் ஆக்டிவ் செய்வது எப்படி என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
ரேஷன் கார்டு:
தமிழகத்தில் ரேஷன் அட்டை தற்போது ஒரு வாழ்வாதாரமாக மாறி விட்டது. மேலும் ரேஷன் கடைகளில் வாங்கும் பொருட்களை வைத்து தான் சாமானிய மக்கள் தங்களின் குடும்பங்களை நடத்தி வருகின்றனர். மேலும் தமிழக அரசும் பல நன்மைகளை ரேஷன் அட்டை தாரர்களுக்கு வழங்கி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக தமிழகத்தை வாட்டி வதைத்த கொரோனா பரவலின் போது ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு ரூபாய் 2000 பணம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பொங்கல் பரிசும் வழங்கப்பட்டது. அடுத்தாக குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்க இருப்பதாக தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டு உள்ளது.
ExamsDaily Mobile App Download
இந்த நிலையில் தற்போது தொடர்ந்து ஆறு மாதங்கள் ரேஷன் பொருட்களை வாங்காமல் இருந்து அவர்களின் ரேஷன் கார்டுகளை ரத்து செய்யப்படும் என்று தெரிவித்து உள்ளனர். இவ்வாறு தங்களின் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு இருந்தால் அதை எவ்வாறு மீண்டும் ஆக்ட்டிவ் செய்யலாம் என்பதை கீழே முழுமையாக பார்ப்போம்.
PNB வங்கியில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிப்பதற்கான முழு விபரங்கள் இதோ!
தற்போது உங்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டு இருந்தால், அதை மீண்டும் ஆக்டிவேட் செய்ய முதலில் மாநில அல்லது மத்திய அரசின் AePDS போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும். பின்பு கீழே குறிப்பிடப்படும் படிகளை பின்பற்றி ரேஷன் கார்டை மீண்டும் ஆக்டிவேட் செய்ய கோரிக்கை விடுவிக்க வேண்டும். அதனை அந்த அதிகாரிகள் ஏற்றுக் கொண்டால் ரத்து செய்யப்பட்ட ரேஷன் கார்டு மீண்டும் ஆக்டிவேட் செய்யப்படும். இல்லை என்றால், https://www.tnpds.gov.in/ போர்ட்டலில் இருக்கும் ‘Ration Card Correction’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்பு ரேஷன் கார்டு திருத்தம் பக்கத்தில் படிவத்தை நிரப்ப வேண்டும்.அடுத்தது, உங்கள் ரேஷன் கார்டில் எவையேனும் பிழைகள் இருந்தால் அதை சரி செய்து கொள்ளலாம்.