ரயில்களில் செல்லும் பயணிகள் கவனத்திற்கு – ரயில்வே துறையின் புதிய அறிவிப்பு!
பொதுமக்கள் பலர் தொலைத்தூர பயணங்களுக்கு ரயில் பயணங்களை தான் விரும்புகின்றனர். இந்நிலையில் மதுரையில் இருந்து இன்று (ஜூன் 17) இரவு 11.25 மணிக்கு புறப்படும் புனலூர் ரயில், நெல்லை வரை மட்டுமே செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது,
ரயில்வே அறிவிப்பு:
தற்போதைய காலத்தில் பலர் சொந்த வாகனங்கள் வைத்திருக்கின்றனர். என்ன தான் கார் வைத்து எல்லா இடங்களுக்கும் சென்றாலும் தொலைதூர பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தை தான் விரும்புகின்றனர். அந்த வகையில் ரயில் பயணங்கள் சௌகரியமாக இருக்கிறது. இந்நிலையில் கொரோனா காலத்தில் பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட போது பல இடங்களுக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து விரைவு ரயில் தவிர பயணிகள் ரயில் கூட செயல்படத் தொடங்கி இருக்கிறது.
Exams Daily Mobile App Download
அதனால் பொது மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் கோடைவிடுமுறை விடப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறையை கழிக்க வெளி ஊருக்கு சென்ற பலர் தற்போது சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். அதனால் ரயில்களில் தற்போது கூட்டம் அதிகமாக இருக்கிறது. முன்பதிவு டிக்கெட் கிடைக்காமல் பலர் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மதுரை கோட்ட ரெயில்வே செய்தித் தொடர்பு அலுவலகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – இனி வீடு தேடி வரும் சேவைகள்! UIDAI அறிவிப்பு!
அதில் திருவனந்தபுரம் கோட்டத்தில் நேமம்-நெய்யாற்றின்கரை இடையே ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மதுரையில் இருந்து இன்று (ஜூன் 17) இரவு 11.25 மணிக்கு புறப்படும் புனலூர் ரயில் நெல்லை வரை மட்டுமே செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் நாளை (ஜூன் 18) புனலூரில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை ரெயில், நெல்லையில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.