ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் கவனத்திற்கு – இப்படி ஒரு வசதியா?
இந்திய பொதுப் போக்குவரத்து துறைகளுள் ஒன்றான ரயில் போக்குவரத்து மிகவும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு ரத்து செய்து மற்றொருவருக்கு மாற்றி விடலாம். இதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
பயணிகள் கவனத்திற்கு
இந்தியாவில் ரயில் போக்குவரத்தில் மிகவும் குறைந்த விலையில் பயணசீட்டை பெற முடியும் என்பதால் சாதாரண மக்கள் அனைவரும் பயணம் மேற்கொள்ள முடிகிறது. அதனால் நாள்தோறும் ரயிலில் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா கால கட்டத்தில் பொதுமக்களின் வருகையை கட்டுப்படுத்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே ரயிலில் பயணம் மேற்கொள்ள முடியும் என்று ரயில்வே வாரியம் அறிவித்தது. தற்போது தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து முன்பதிவில்லா சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து தற்போது ரயிலில் முன்பதிவு செய்து விட்டு பயணம் மேற்கொள்ள முடியாத சூழலில் ரத்து செய்ய வேண்டியிருக்கும். இதனால் பணமும் நமக்கு திரும்ப கிடைப்பதில்லை. மேலும் மற்றொருவர்களுக்கு டிக்கெட் மாற்றினாலும் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகாது. இதனால் பயணிகளுக்கு நஷ்டம் மட்டுமே கிடைக்கும். இதனை தடுக்கும் விதமாக தற்போது ரயில்வே துறை வேறொருவருக்கு டிக்கெட் மாற்றும் வசதியை கொண்டு வந்துள்ளது. அதன்படி நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டை உங்கள் குடும்பத்தில் உள்ள தந்தை, தாய், சகோதரன், சகோதரி, மகன், மகள், கணவன் மற்றும் மனைவி உள்ளிட்டவர்களுக்கு மாற்றலாம் என்று அறிவித்துள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!
இதில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணி அரசு ஊழியர் எனில் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு அவர் இன்னொரு நபரின் பெயருக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கலாம். இதே போல் திருமணத்திற்கு செல்பவர்களாக இருப்பின் 48 மணி நேரத்திற்கு முன்பாக டிக்கெட்டின் நகல், மாற்றப்படக்கூடிய நபரின் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் நகல் ஆகியவற்றை அருகிலுள்ள ரயில் நிலையத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இந்த டிக்கெட்களை மாற்றும் வசதி ஒரு முறை மட்டுமே வழங்கப்படும்.