அரசு பள்ளி ஆசிரியர்களின் கவனத்திற்கு – கர்நாடக கல்வி துறை முக்கிய உத்தரவு!
கர்நாடகாவில் கொரோனாவுக்கு பிறகு தற்போது தான் பள்ளிகள் வழக்கமாக இயங்கி வருகிறது. இந்த நிலையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு காலையில் தாமதமாக வருவதாக குற்ற சாட்டு எழுந்தது. இதனையடுத்து பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
புதிய உத்தரவு:
இந்தியா முழுவதும் பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த 2020 மற்றும் 2021 ம் ஆண்டுகளில் பள்ளிகள் நேரடியாக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. மாணவர்களுக்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. அதனால் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் மூடப்பட்டது. இத்தகைய நேரத்தில் கல்வி பாதிப்படையக் கூடாது என்று ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடந்து வந்தது. பிறகு பல்வேறு கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக படிப்படியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இறங்கு முகத்தை சந்தித்தது.
அதனால் ஊரடங்கில் தேவையான தளர்வுகள் அளிக்கப்பட்டு 2022 – 2023ம் கல்வியாண்டில் அரசு அனுமதியுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது. மேலும் கொரோனா காலகட்டத்திற்கு முன்பு இருந்தது போல நேரடி வகுப்புகள் தற்போது வழக்கம் போல இயங்கி வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் மந்திரி நாகேஷ் அவர்கள் சமீபத்தில் மண்டியா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது காலை நேரத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு தாமதமாக வந்ததை பார்த்தார்.
Exams Daily Mobile App Download
SBI வங்கி FD தொகையை முன்கூட்டியே பெற அபராதம்? எச்சரிக்கை தகவல்!
அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வந்ததை அடுத்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு 15 நிமிடத்திற்கு முன் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்களின் வருகை பதிவு முறைக்கு பயோமெட்ரிக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்