தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களின் கவனத்திற்கு – பாமாயில் கிடைப்பதில் சிக்கல்!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இப்போது இதில் பாமாயில் எண்ணெய் கிடைப்பது சற்று சிக்கலாக உள்ளது. ஏனெனில் இந்த எண்ணெய் தொடர்பாக வழக்கு ஒன்று உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது. இதனை பற்றி முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
ரேஷன்கார்டுதாரர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் சாதாரண மக்களுக்கு அன்றாட தேவையான உணவு பொருட்களை ரேஷன் கார்டு மூலமாக ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலமாக மக்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட சமையலுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 4 கோடி பாக்கெட் பாமாயில் சப்ளை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கடந்த டிசம்பர் மாதத்தில் டெண்டர் கோரியிருந்தது.
Exams Daily Mobile App Download
அதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகமும் மே 3ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று உணவு பொருட்கள் வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இதனை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னையை சேர்ந்த ஸ்டார் ஷைன் லாஜிஸ்டிக்ஸ், ருச்சி சோயா உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு சூரியகாந்தி எண்ணெய் அதிகளவில் சப்ளை செய்யப்படும். தற்போது இங்கு போர் நடப்பதால் சப்ளை செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.
4.5 லட்சம் அரசு ஊழியர்களுக்கு 203 சதவீத அகவிலைப்படி உயர்வு – ஜனவரி 2022 முதல் நிலுவைத்தொகை!
இதற்கு அடுத்த நிலையில் உள்ள பாமாயிலின் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலையும் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு தரப்பில், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே நடக்கும் போர் உள்நாட்டில் மட்டுமே நடக்கிறது. கடல் மார்க்கமான வணிகத்திற்கு எவ்வித பாதிப்பு இல்லை. அத்துடன் மலேசியா மற்றும் இந்தோனேசியா மற்றும் பிற நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்ய முடியும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதிகள் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர். அதனால் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு பாமாயில் எண்ணெய் கிடைப்பது சற்று சிக்கலாகதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.