3 முதல் 8ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு – இனி தேர்வு முறையில் மாற்றம்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் முன்னதாக பள்ளி மாணவர்களுக்கு 3ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நிறுத்தப்பட்டிருந்த பருவ தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
நிபுணர்கள் குழு:
பள்ளி மாணவர்களுக்கு முன்பு வருடம் முழுவத்திற்குமான அனைத்து பாடங்களின் தொகுப்பும் ஒரே புத்தகத்தில் பாட வாரியாக வழங்கப்பட்டு வந்தது. இதனால் மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கான புத்தங்களையும் வருடம் முழுவதும் சுமந்து செல்லும் நிலை இருந்தது. இதனால் பாட புத்தகத்தின் சுமை அதிக அளவில் இருந்தது. இதனை யோசித்து தமிழக அரசு பருவ வாரியாக படிக்க வேண்டிய புத்தங்களை அச்சிட்டு தனித்தனியாக வழங்கியது.
இதனால் மாணவர்களின் புத்தக சுமை மட்டுமல்லாமல், படிக்க வேண்டிய சுமையும் குறைந்தது. பருவ தேர்வுகள் முறைக்கு பின்னால் மாணவர்களுக்கு கல்வி முறையும் எந்த வித மனஅழுத்தமும் இல்லாமல் மாறி விட்டது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில அரசு, 3 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத் தேர்வுகள் மற்றும் பருவ இறுதித் தேர்வுகளை நடத்துவதை 10 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தியது. தற்போது இந்த தேர்வுகளை மீண்டும் நடத்துவதற்கு அரசு ஆலோசித்து வருகிறது.
தமிழக கோயில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம்.. தேர்வுக்குழு அமைப்பு – அறநிலையத்துறை உத்தரவு!
Exams Daily Mobile App Download
இதற்காக, 3 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் அலகுத் தேர்வுகள் மற்றும் பருவ இறுதித் தேர்வுகளை தொடங்குவது குறித்து மாநில அரசு ஒரு குழுவை அமைக்க உள்ளதாக மகாராஷ்டிர மாநில கல்வித்துறை அமைச்சர் தீபக் கேசர்கர் நேற்று அறிவித்துள்ளார். மேலும், இந்த தேர்வுகளின் மூலம் எந்த ஒரு மாணவரும் தேர்ச்சி அடையவில்லை என்ற சூழலும் உண்டாகாது என்றும் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்