தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு ஆசிரியர்கள் கவனத்திற்கு – கலந்தாய்வு குறித்த அறிவிப்பு!
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜூன் 13ம் தேதி அன்று அடுத்த கல்வியாண்டு தொடங்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து பார்ப்போம்.
ஆசிரியர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் கடந்த 2 ஆண்டுகளாக சரிவர நடத்தப்படவில்லை. இதையடுத்து கொரோனா தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி அன்று திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்பட தொடங்கின. அதன்படி 2 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட தொடங்கின. இதனை தொடர்ந்து தற்போது திட்டமிட்டப்படி பொதுத்தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டு வருகிற ஜூன் 13ம் தேதி அன்று தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக ஆசிரியர்கள் பணியிடத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் கண்டறியப்பட்டது.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் – அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை!
அதன்படி தற்போது தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்று எதிர்பார்த்த வண்ணம் உள்ளன. மேலும் தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கு வருகிற ஜூன் 13ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளது. அதனால் அதற்குள் இந்த கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக ஜூன் மாதம் 13ம் தேதி நீதிமன்றம் வெளியிடும் அறிவிப்பை பொறுத்து முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அதன் பின் அரசு இது தொடர்பாக அரசாணையை வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.