தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டம் குறித்து முக்கிய உத்தரவு!

0
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - பாடத்திட்டம் குறித்து முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - பாடத்திட்டம் குறித்து முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டம் குறித்து முக்கிய உத்தரவு!

தமிழகத்தில் கடந்த ஜூன் 13ம் தேதி, நடப்பு (2022- 23) கல்வி ஆண்டில், கொரோனா கட்டுப்பாடுகள் எதுவுமின்றி வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் பாடத்திட்டம் ஏதும் குறைக்கப்படாமல், 2019 – 20 ஆம் கல்வி ஆண்டில் அமலான முழு பாடங்களும் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாடத்திட்டம்:

கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா வைரஸ், சீனாவில் முதன் முதலாக பரவத் தொடங்கியது. இந்த தொற்று, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தீவிரமாக பரவியது. இதை கட்டுப்படுத்த உலக சுகாதார துறை ஊரடங்கு விதிகளை கையில் எடுத்தது. மேலும் ஊரடங்கு காலகட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் பல மாதங்கள் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வழியில் பாடங்கள் நடத்தப்பட்டன. மேலும் தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்தால், கடந்த பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து 2021- 2022 கல்வி ஆண்டில் பள்ளிகளுக்கு அதிகளவில் விடுமுறை விடப்பட்டதால், பாடத்திட்டத்தின் அளவு குறைக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

அதன்படி வழக்கமான பாடத்திட்டத்தில் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 50 சதவீதம், 9ம் வகுப்புக்கு 38, 10ம் வகுப்புக்கு, 39, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு 35 சதவீதம் பாடங்கள் குறைக்கப்பட்டன. இதன் அடிப்படையில் பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்பட்டன. மேலும் பள்ளி நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால், பொதுத் தேர்வுகள் கடந்த மாதம் இறுதி வரை நடைபெற்றது. மேலும் அனைத்து வகை பள்ளிகளிலும் 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து 14ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில், 1 முதல் 10ம் வகுப்பு வரை 2022-23 ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஜூன் 13ம் தேதி துவக்கப்பட்டு உள்ளது,

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

இந்நிலையில் நோய்த் தொற்று கட்டுக்குள் வந்து உள்ளதால் நடப்பு கல்வி ஆண்டில் கொரோனா கட்டுப்பாடுகள் எதுவுமின்றி வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது இதையடுத்து, கொரோனாவுக்கு முந்தைய நிலையில் இருந்தபடியே பாடத்திட்டமும் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் என பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் 2019-20ம் கல்வி ஆண்டில் அமலான முழு பாடத்திட்டம், நடப்பு கல்வி ஆண்டிலும் நடத்தப்படும் என்றும், தற்போதைய நிலையில் பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!