தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டம் குறித்து கல்வித்துறை உத்தரவு!

0
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - பாடத்திட்டம் குறித்து கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - பாடத்திட்டம் குறித்து கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டம் குறித்து கல்வித்துறை உத்தரவு!

தமிழகத்தில் கடந்த ஜூன் 13ம் தேதி, நடப்பு (2022- 23) கல்வி ஆண்டில், கொரோனா கட்டுப்பாடுகள் எதுவுமின்றி வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் பாடத்திட்டம் ஏதும் குறைக்கப்படாமல், 2019 – 20 ஆம் கல்வி ஆண்டில் அமலான முழு பாடங்களும் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

முழு பாடத் திட்டம் அமல்:

தமிழகத்தில், கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டன. இது மாணவர்களின் கல்வியில் பெரிய இடைவெளியை ஏற்படுத்தியது. மேலும் ஊரடங்கு காலத்தில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்றது. அவ்வப்போது கொரோனா குறைவு காரணாமாக பள்ளிகள் திறக்கப்பட்டது, இருப்பினும் மாணவர்களுக்கு பாடச்சுமையைக் குறைக்கும் வகையில் 1 முதல் 12-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை திருத்தி அமைத்தது.

Exams Daily Mobile App Download

அதன்படி, 11, 12ம் வகுப்புகளில் 60-65% பாடங்கள் மட்டுமே முக்கிய அம்சங்களாக (prioritised Syllabus) எடுத்துக் கொள்ளப்பட்டு, 40-35 சதவீதம் வரை பாடத்திட்டம் குறைக்கப்பட்டது. இதனிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்விலும் முக்கிய அம்சங்களில் இருந்தும் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. அதேபோன்று, இதர வகுப்புகளைப் பொறுத்தவரை, தோராயமாக 50% பாடங்கள் முக்கிய அம்சங்களாகவும் இதர பாடங்கள் குறைக்கப்பட்டது.

தமிழகத்தில் LKG & UKG வகுப்புகளுக்கு 5000 சிறப்பாசிரியர்கள்? பள்ளிக்கல்வித்துறையில் புதிய அறிவிப்பு!

உருமாறிய ஓமிக்ரான் ஏற்படுத்திய மூன்றாவது அலை பாதிப்புகள் குறைந்ததை அடுத்து, தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் 2022-23 கல்வியாண்டில், தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.

அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளிலேயே, விலையில்லா பாடப்புத்தகங்கள் போன்றவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு கொரோனா தொற்றுக்கு முந்தைய பாடத்திட்டமே ( 2019 – 20ம் கல்வி ஆண்டில் அமலான முழு பாடத் திட்டம்) தொடரும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் தற்போதைய நிலையில் பாடத் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!