தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு!
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு மாணவர்களுக்கான புதிய திட்டங்கள் அமலுக்கு வர உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த ஆண்டுகளில் பள்ளிகளில் திறக்கப்படவில்லை. தினசரி வகுப்புகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வந்தது. மேலும் அரசு பள்ளி மாணவர்களை கருத்தில் கொண்டு அரசு கல்வி தொலைக்காட்சிகளை அறிமுகப்படுத்தி தினசரி பாடங்களை நடத்தியது. இந்த நேரத்தில் ஆன்லைன் கல்வி எந்த அளவிற்கு சிறப்பான கற்றலை அளிக்கும் என்ற அச்சத்தை ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏற்படுத்தியது. அதனால் விரைவில் பள்ளிகளை திறந்து நேரடி கற்பித்தலை தொடங்க வலியுறுத்தப்பட்டது.
இது குறித்து பல்வேறு கட்ட கலந்தாலோசனைகள் நடத்தப்பட்டு கடந்த ஜனவரி மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்த நேரத்தில் பொதுத்தேர்வுகள் நடத்தவும் திட்டமிட்டபட்டு கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. அதன் படி 1 – 9 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்து முடிந்து 1 மாத காலம் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 31ம் தேதியுடன் தேர்வுகள் முடிந்த பிறகு கோடை விடுமுறை அளிக்கப்படவுள்ளது. இந்த கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 13ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணிகள், பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்படுத்துதல், மதிப்பெண் பட்டியல் தயார் செய்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால் ஜூன் 4வது வாரத்தில் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. அதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் முதற்கட்டமாக ஒரு சில மாவட்டங்களில் அமலுக்கு வரும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.