தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவு!

0
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியோர் கவனத்திற்கு - முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியோர் கவனத்திற்கு - முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவு!

தமிழகத்தில் திட்டமிட்டபடி 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதாதவர்களுக்கு மறுதேர்வில் பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மாணவர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2ம் அலையின் தாக்கம் காரணமாக கடந்த கல்வியாண்டு தாமதமாக தொடங்கப்பட்டது. அத்துடன் பொதுத்தேர்வு கட்டாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. மேலும் குறைவான நாட்களே நேரடி வகுப்புகள் நடைபெற்றதால் பொதுத்தேர்வுக்குரிய பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் கொரோனா அலையின் 3ம் அலையின் தாக்கத்தால் கடந்த ஜனவரி மாதம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

வங்கி தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு..!

அதனால் பொதுத்தேர்வுக்குரிய பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப்படாமல் இருந்தனர். அதனால் வாரத்தில் 6 நாட்கள் வரை வகுப்புகள் நடத்தப்பட்டது. இது மாணவர்களுக்கு பெரும் சுமையாக இருந்தது. இதையடுத்து 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி கடந்த மாதம் நடைபெற்றது. ஆனால் கொரோனா காரணமாக லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த பொதுத்தேர்வுகளில் கலந்து கொள்ளவில்லை. அதாவது இதில் 12ம் வகுப்பில் 1.95 லட்ச மாணவர்களும் மற்றும் 10ம் வகுப்பை சேர்ந்த 2.25 லட்ச மாணவர்களும், 11ம் வகுப்பில் 2.58 லட்சம் மாணவர்களும் கலந்து கொள்ளவில்லை.

அதன்படி தமிழகத்தில் மொத்தமாக 6,79,467 மாணவர்கள் பொதுத்தேர்வில் கலந்து கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை துணைத்தேர்வில் கலந்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதாத மாணவர்கள் ஜூலை மாதத்தில் நடைபெற உள்ள மறுத்தேர்வில் கலந்து கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!