தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு முடித்தவர்கள் கவனத்திற்கு – இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ்!
தமிழகத்தில் கடந்த 20ம் தேதி 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது இதனையடுத்து இன்று முதல் (ஜூன் 24) தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இணையதளம் வாயிலாக மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண் சான்றிதழ்:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து கடந்த 5ம் தேதி 12ம் வகுப்புக்கு 6ம் தேதி 10ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு தொடங்கியது. அதே போல 1 – 9ம் வகுப்பு வரையிலான வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதி தேர்வு தொடங்கி நடைபெற்று முடிவடைந்தது. அதனை தொடர்ந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டு 1 -10 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 13ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 2022 – 2023 ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் நடைபெற தொடங்கியது. இந்த நிலையில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் மதிப்பீடு பணிகள் நடைபெற்று வந்தது.
Exams Daily Mobile App Download
இதையடுத்து கடந்த ஜூன் 20ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பிற்கும் மதியம் 1 மணிக்கு 10ம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 2021 – 2022ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வில் 12ம் வகுப்பில் மொத்தம் 7.55 (93%) லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 5.36% பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 10ம் வகுப்பில் 90.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4,52,499 மாணவிகளும் 4,60,120 மாணவர்கள் ஆவார். அதனை தொடர்ந்து ஜூன் 24ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு கட்டாயம் – கல்வித்துறை ஆணையர் உத்தரவு!
அதன்படி இன்று 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணிகள் தொடங்கி உள்ளது. www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் 1மணி முதல் பிறந்த தேதி ,பதிவு எண் ஆகிய விவரங்களை உள்ளீட்டு சான்றிதழ் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.