தமிழக கல்லூரி மாணவிகளுக்கான ரூ. 1000 உதவித்தொகை திட்டம் – முதல்வர் தொடக்கி வைப்பு!

0
தமிழக கல்லூரி மாணவிகளுக்கான ரூ. 1000 உதவித்தொகை திட்டம் - முதல்வர் தொடக்கி வைப்பு!
தமிழக கல்லூரி மாணவிகளுக்கான ரூ. 1000 உதவித்தொகை திட்டம் - முதல்வர் தொடக்கி வைப்பு!
தமிழக கல்லூரி மாணவிகளுக்கான ரூ. 1000 உதவித்தொகை திட்டம் – முதல்வர் தொடக்கி வைப்பு!

தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் 2 -வது கட்ட நடவடிக்கைகளை தமிழக முதல்வர் இன்று துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர் இத்திட்டத்தின் கீழ் 12,000 மாணவிகள் மீண்டும் உயர்கல்வியை தொடர்ந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

புதுமை பெண் திட்டம்:

தமிழகத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் மாற்றியமைக்கப்பட்டு தற்போது புதுமைப் பெண் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வி சேர வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்!!

இதன் கீழ் பயன்பெற விரும்பும் மாணவிகள் 6 – 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று இருக்க வேண்டும். இந்த திட்டத்தை கடந்த 2022 ம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி அன்று தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். இதன் கீழ் தற்போது வரை 1,16,342 மாணவிகள் பயனடைந்துள்ளனர். அதனை தொடர்ந்து இன்று புதுமைப்பெண் திட்டத்தின் 2 -வது கட்ட நடவடிக்கைகளை முதல்வர் முக.ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார்.

அப்போது பேசிய அவர் தமிழகத்தில் பெண் கல்வியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளி செல்லும் மாணவிகள் அதன்பிறகு உயர்கல்வியை தொடர வேண்டும் என்ற நோக்கில் தான் புதுமை பெண் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது இத்திட்டத்தால் இடைநிற்றலில் இருந்து 12,000 மாணவிகள் மீண்டும் உயர்கல்வியை தொடர்ந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!