அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு குறித்து டெல்லி அரசின் அறிக்கை – நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு!

0
அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு குறித்து டெல்லி அரசின் அறிக்கை - நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு!
அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு குறித்து டெல்லி அரசின் அறிக்கை - நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு!
அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு குறித்து டெல்லி அரசின் அறிக்கை – நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு!

டெல்லியில் கொரோனா கால கட்டத்தில் (2020) அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு உதவித்தொகையை தற்போது வழங்குமாறு மகிளா ஏக்தா மோர்ச்சா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதற்கு டெல்லி அரசாங்கம் அறிக்கை சமர்பித்துள்ளதை பற்றி விரிவாக பார்ப்போம்.

பள்ளி மாணவர்கள்:

நாட்டில் கொரோனா கால கட்டத்தில் (2020) பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், 2020 ஆம் ஆண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு பாதுகாப்பு உதவித்தொகையை தற்போது வழங்க வேண்டும் என டெல்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மகிளா ஏக்தா மோர்ச்சா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. மத்திய அரசின் அறிவிப்பு – முழு விவரம் இதோ!

இந்த வழக்கு விசாரணையின் போது, டெல்லி அரசு சார்பாக அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், 2020-21 ஆம் ஆண்டிற்கான உணவுப் பாதுகாப்பு நிதி ரூ. 27.1776 கோடியை தற்போது மத்திய அரசு விடுவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி அரசுக்கு மொத்தமாக ரூ.106 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளது. அதனால் தற்போது, டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுவதாகவும் டெல்லி அரசாங்கம் உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!