தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் சுற்றறிக்கை!
தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொருட்களை தவிர மற்ற கூடுதலான பொருட்களை மக்கள் வாங்குவதற்கு கட்டாயப் படுத்தக் கூடாது என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உணவுப் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் கடைகள்:
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாகவே மக்களுக்கான பல சிறப்பு திட்டங்களின் நன்மைகளும் வழங்கப்படுகின்றது. மேலும், மாதம் தோறும் மக்களுக்கு குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் மற்றும் அரசி, கோதுமை போன்றவற்றை இலவசமாகவும் வழங்குகிறது. இது தவிர ரேஷன் கடை ஊழியர் கூடுதலான மற்ற பொருட்களை கட்டாயப் படுத்தி பொதுமக்களிடம் விற்பனை செய்து வருவதாக பல புகார்கள் தமிழகம் முழுவதும் எழுந்து வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக, தமிழக உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!
அந்த அறிக்கையில், கூடுதலான மற்ற பொருட்களின் விற்பனை தொடர்பான புகார் அளிப்பதற்கு பொதுமக்களை வேறு எந்த ஒரு அரசு அலுவலகத்திற்கும் செல்ல வேண்டாம். அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரேஷன் கடைகளிலேயே இதற்கான அங்கீகார படிவத்தினை பெற்று அதனை நிரப்பி, ரேஷன் கடை ஊழியரிடம் வழங்க வேண்டும். ஊழியர்கள் இந்த படிவத்தினை சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பார். ரேஷன் கடை பணியாளர்கள் இந்த கோரிக்கை படிவங்களை முறையாக பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
அட்டை தாரரின் குடுமத்தில் வேறு நபர்கள் இல்லாத பட்சத்தில் கோரிக்கை படிவம் பெற்று, உடனே அத்தியாவசிய பொருட்களை வழங்க ஆணையிட்டுள்ளது. மேலும், ரேஷன் கடைகளில் அரசின் பொது விநியோகத் திட்டத்தில் இல்லாத மற்ற பொருட்களை வாங்குவதற்கு மக்களை கட்டாயப் படுத்தக் கூடாது. மக்கள் தங்கள் விருப்பத்தில் வாங்கு பொருட்களுக்கு முறையான ரசீது வழங்க வேண்டும். அவை அரசின் திட்டத்தில் இல்லாத காரணத்தால் குறுஞ்செய்தியில் அந்த பொருட்களுக்கான ரசீது வழங்கப்பட வாய்ப்பில்லை என்று உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.