பொருளாதார நெருக்கடியால் உணவு பொருட்களின் விலை அதிரடி உயர்வு – மக்கள் கடும் அவதி!
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி கொண்டே வருகிறது. இந்த நிலையில் நாட்டில் எரிபொருட்கள் விலை உயர்ந்துள்ளதால் உணவகங்களிலும் உணவு பொருட்களின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உணவு விலை உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் தடுப்பு பணிகளை மேற்கொள்ள அதிகமான அளவு செலவினத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதன் காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு நாடுகள் நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வருகின்றனர். ஆனால் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இன்னும் நிலவி வருகிறது.
Exams Daily Mobile App Download
அத்துடன் பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து தற்போது நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் இதனை கட்டுப்படுத்த பொது போக்குவரத்துக்கு 2 வாரங்களுக்கு தடை என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் இது போன்ற கடுமையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் பொதுத்துறை அரசு ஊழியர்கள் 2 வாரம் வீட்டில் இருந்தபடியே பணி புரிய வேண்டும்.
11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச சைக்கிள் எப்போது? அதிகாரிகள் விளக்கம்!
மேலும் நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு பெட்ரோல், டீசல், கோதுமை மாவு, உணவு வகைகள், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக பொது போக்குவரத்துகளின் டிக்கெட் விலையும் அதிகரித்தது. இந்த நிலையில் நாட்டில் அனைத்து உணவகங்களிலும் உணவு பொருட்களின் விலையை 10%க்கும் மேல் உயர்த்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கு அத்தியாவசிய விலை உயர்வு காரணமாக பல குடும்பங்களில் 3 வேளை உணவுக்கு பதிலாக 2 வேளை மட்டுமே சாப்பிட்டு வருகின்றனர். இந்த நிலையில் உணவு பொருளின் விலை உயர்வு சாமானிய மக்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.