தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் பறந்த முக்கிய உத்தரவு – நாளை முதல் மாஸ்க் கட்டாயம்!
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,366 ல் இருந்து 4,678ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் அனைத்து அலுவலர்களும் நாளை முதல் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என பொதுத்துறை அரசு துணைச் செயலாளர் அறிவித்துள்ளார்.
மாஸ்க் கட்டாயம்:
நாடு முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் நோய் தொற்று இந்தியாவில் 41 சதவீதமாக தற்போது அதிகரித்து வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர். மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் 17 மாவட்டங்களில் 2 நாட்களாக நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும் அண்மையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும் ஜூன் 12ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. எனவே தடுப்பூசி போடாதவர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தமிழகத்தில், நேற்று 20,227 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், சென்னையில் 345, செங்கல்பட்டில் 126, கோவையில் 55 உள்பட மொத்தம் 771 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,63,068ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 419 ஆக அதிகரித்துள்ளது. பெண்களின் எண்ணிக்கை 352 ஆக உள்ளது. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உள்ளது. இந்நிலையில், பொதுத்துறை அரசு துணைச் செயலாளர் எஸ்.அனு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு இலவச திட்டம் – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
அதில் ‘தமிழகத்தில் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாலும், சில மாவட்டங்களில் நோய் தொற்று குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாலும், நோய்த் தொற்றின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பது அவசியம் என்பதாலும், அனைத்து அலுவலர்களும் 24-6-2022 (நாளை) முதல் கட்டாயமாக மாஸ்க் அணிந்து அலுவலகத்திற்கு வருமாறும் சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இன்று டெல்லியில் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.