குழந்தைகளை தாக்கும் ப்ளூ வைரஸ் – அச்சத்தில் பொதுமக்கள்! சென்னையில் அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கை!

0
குழந்தைகளை தாக்கும் ப்ளூ வைரஸ் - அச்சத்தில் பொதுமக்கள்! சென்னையில் அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கை!
குழந்தைகளை தாக்கும் ப்ளூ வைரஸ் - அச்சத்தில் பொதுமக்கள்! சென்னையில் அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கை!
குழந்தைகளை தாக்கும் ப்ளூ வைரஸ் – அச்சத்தில் பொதுமக்கள்! சென்னையில் அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கை!

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இந்த மழை காலத்தில் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை ப்ளு வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். தற்போது மாநில தலைநகர் சென்னையில் ப்ளு வைரஸ் காய்ச்சல் வேகமெடுக்க தொடங்கி உள்ளது.

ப்ளு வைரஸ்:

தமிழகத்தில் தற்போது தான் கொரோனா வைரஸின் தீவிரம் சற்று குறைந்துள்ளது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் ப்ளு வைரஸ் அதிகம் பரவி வருகிறது. இதனால் குழந்தைகள் சளி, இருமல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். எப்போதும் மழை காலங்களில் காலநிலை மாற்றத்தின் காரணமாக அதிகம் நோய்கள் பரவும். அந்த வகையில் கடந்த மாதம் டெங்கு காய்ச்சல் பரவும் ஆபாயம் ஏற்பட்டது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக சாலைகள் மற்றும் மக்கள் வசிக்க கூடிய தெருக்களில் கழிவுநீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளை (செப்.14) மின்தடை செய்யப்படும் பகுதிகள் – பொதுமக்கள் கவனத்திற்கு!

இதனால் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கியது. இதனையடுத்து மாநில சுகாதாரத்துறை போர்கால அடிப்படையில் தடுப்பு பணிகளை மேற்கொண்டது. அதனை தொடர்ந்து தற்போது ப்ளு வைரஸ் பரவ தொடங்கி உள்ளது. கடந்த ஒரு மாத காலமாக வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதனால் மருத்துவமனைகளிலும் நோயாளிகள் கூட்டமும் அதிகரித்துள்ளது. சளி, காய்ச்சல், தீராத இருமல், உடல் வலி, தலைவலி, சோர்வு, தொண்டை வறட்சி, வாந்தி போன்ற உடல் உபாதைகள் நோயின் அறிகுறியாக உள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த வைரஸ் பாதிக்கப்பட்டால் குணமாக 2 முதல் 3 நாட்கள் வரை ஆகும். சிலருக்கு ஒரு வாரம் கூட ஆகலாம். மேலும் ப்ளு வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மிக எளிதாக பரவி விடும். அதாவது பாதிக்கப்பட்டவர் இருமும் போதும், தும்மும் போதும் வெளியேறும் நீர் துளிகள் மூலம் மற்றவருக்கு பரவும். அதனால் காய்ச்சல் உள்ளவர்கள் தனிமையில் இருப்பது சிறந்தது. மேலும் ப்ளு அறிகுறிகள் உள்ளவர்கள் முககவசம் அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். முடிந்த அளவு கொதிக்க வைத்து நன்கு ஆற வைத்த நீரை பருகுவது நல்லது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!