பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!
கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஒரு சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் முக்கியமான அணைகள் நிரம்பக்கூடிய தருவாயில் இருக்கிறது. இதனால் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை விடுப்பு
தற்போது கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பிக் கொண்டிருக்கிறது. அதாவது, கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கே.ஆர்.எஸ் அணை முழுவதுமாக நிரம்புவதற்கு வெறும் 4 அடி மட்டுமே மீதம் இருக்கிறது என்றும், கபினி அணை நிறைவதற்கு இன்னும் 2 அடி மட்டுமே இருப்பதாவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், இந்த அணைகளுக்கு வரும் தற்போதைய நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக இருக்கிறது. இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில், நாளை (ஜூலை 10) மாலைக்குள் இந்த அணைகள் முழு கொள்ளளவை எட்டும் என்று அதிகாரிகள் கணித்துள்ளனர். அதே போல கபினி அணைக்கும் தற்போது நீர்வரத்து கணிசமாக வந்து கொண்டிருப்பதால் எந்த நேரத்திலும் அணை திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் கரையோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது.
TNPSC குரூப் IV தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
இதனை கருத்தில் கொண்டு காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மைசூர் மாவட்ட நிர்வாகம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அந்த வகையில் காவிரி கரையோரப்பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நிரம்புவதற்கும் வாய்ப்புகள் இருப்பதால், அதன் கரையோர பகுதிகளில் இருக்கும் மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்குமாறு தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.