காவிரி டெல்டா பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை – நீர் வளத்துறை அறிவிப்பு!
கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அதனால் காவிரி கரையோர மக்களுக்கு நீர் வளத் துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை:
கர்நாடகா மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அங்கிருக்கும் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி இருக்கின்றன. மேலும் அணைகளின் பாதுகாப்பு காரணமாக காவிரியில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதனால் காவேரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு 1,13,000 கன அடிக்கு மேல் அதிகரித்துள்ளது. அதனால் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 115,73 அடியாக உயர்ந்தது.
Exams Daily Mobile App Download
தொடர்ச்சியாக நீர்மட்டம் அதிகரித்து வருவதால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதனால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 11 காவிரி டெல்டா மாவட்ட ஆட்சியர்களுக்கு மேட்டூர் நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் வெள்ள அபாய எச்சரிக்கை அனுப்பி இருக்கிறார்.
தமிழக மாணவர்களுக்கான இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்து? அமைச்சர் விளக்கம்!
அதனால் காவிரி கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் தங்களது உடமைகளை பாதுகாப்பாக வைத்து கொள்வது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வெள்ள அபாய எச்சரிக்கை மேட்டூர் உபரி நீர் போக்கியின் இரு கரைகளிலும் உள்ள தங்கமாபுரிப்பட்டினம், அண்ணா நகர், பெரியார் நகர், காவிரி பாலம், காவேரி கிராஸ், நவபட்டி மற்றும் நாட்டாமங்கலம் பகுதிகளில் தண்டோரா மூலம் வருவாய் துறையினர் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.