தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை – கவனமாக இருங்க மக்களே! நெருங்கும் ஆபத்து!
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகளின் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தின் முக்கிய அணையான வைகையின் நீர் மட்டம் உயர்ந்து தற்போது 68.50 கன அடியாக உள்ளது. இதனால் குறிபிட்ட 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை:
தமிழகம், புதுவை, கேராளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 1 மாதமாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் நல்ல மழை பெய்தது. அதனை தொடர்ந்து இன்று நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து ஆகியவற்றால் வைகை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 70 அடியாக உள்ளது. இதனையடுத்து வினாடிக்கு 7000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை – உயர்கல்வி இயக்குனரகம் அறிவிப்பு! மாணவர்கள் ஹாப்பி!
Exams Daily Mobile App Download
அதனால் மக்களின் பாதுகாப்பு கருதி தேனி, சிவகங்கை, மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்