ஏழை மக்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்புகள்.. இறுதி கட்ட பணிகள் தீவிரம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆனது ஏழை எளிய மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்க உள்ளது குறித்த முக்கிய விவரங்களை வெளியிட்டுள்ளது. மேலும் இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகள்:
தமிழகத்தில் வீடு அற்றவர்களுக்கு உதவும் வகையில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏழை எளியவர்களுக்கான வீடுகளை அரசு வழங்கி வருகிறது. இதற்காக தமிழக மாவட்டங்கள் முழுவதிலும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது திருவள்ளூர் மாவட்ட நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் உதவி நிர்வாக பொறியாளர் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏழை எளியவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
இதற்காக தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் அல்லது பணிகள் நடைபெறும் பகுதிகளில் நேரடியாக விண்ணப்பங்களை அளிக்கலாம். திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல லட்சம் மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலமாக ஆயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
தமிழகத்தில் டெங்கு தடுப்பு பணிகள் மும்மரம் – சுகாதாரத்துறை போட்ட அதிரடி உத்தரவு!
ஒரு வீட்டின் மதிப்பில் 7 லட்சம் அளவிற்கு தமிழ்நாடு அரசு மானியமாகவும், ரூ.1.5 0 லட்சம் மதிப்பில் மத்திய அரசின் மானியமும் வழங்கப்படுகிறது. மீதமுள்ள தொகையை பயனாளிகள் செலுத்த வேண்டும். திருவள்ளூரில் நடைபெற்று வரும் அடுக்குமாடி கட்டுமான குடியிருப்பு பணிகளின் இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், மூன்று மாதங்களில் இப்பணிகள் முழுவதுமாக முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.