Post Office மாதாந்திர வருவாய் திட்டம் அறிவிப்பு – மாதம் ரூ.4950 வருமானம் பெறலாம்!
மத்திய அரசால் இயக்கப்படும் போஸ்ட் ஆபீஸில் மாதம் ரூ.4950 வருமானம் பெறும் வகையில் மாதாந்திர வருவாய் திட்டம் ஒன்று அமலில் உள்ளது. இது குறித்த முழு விபரங்களை இப்பதிவில் காணலாம்.
மாதாந்திர வருவாய் திட்டம்:
மக்கள் அனைவரும் நம்முடைய பணத்தை ரியல் எஸ்டேட், நகை, சிட் ஃபண்ட், ஷேர் மார்கெட் என்று பல்வேறு விதமாக முதலீடு செய்து வருகிறோம். ஆனால் இவை அனைத்தும் அவ்வளவு பாதுகாப்பானதா? என்று யோசித்தால் அனைத்திலும் ஏதேனும் ஒரு சட்டசிக்கல் இருக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் எதையும் நம்பி முதலீடு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏனெனில் மேற்சொன்ன ரியல் எஸ்டேட், சிட் ஃபண்ட், ஷேர் மார்கெட் போன்றவைகளில் பெரும்பாலானோர் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஊரடங்கு கட்டுப்பாடு முழுவதும் நீக்கம் – அதிரடி அறிவிப்பு!
இந்நிலையில் நம்முடைய பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்து, அதில் மிகவும் பாதுகாப்பான ஒரு ரிட்டர்ன்ஸ் கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அவ்வாறு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக போஸ்ட் ஆபீஸ்-ல் ஒரு சிறந்த மாதாந்திர வருவாய் திட்டம் அமலில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் கணவன், மனைவி இருவரும் தங்களது வருமானத்தை சேமிக்கும் விதமாக 9 லட்சம் ரூபாயை முதலீடு செய்தால் மாதம் வருமானமாக ரூ.4,950 கிடைக்கும். அதாவது வருடத்திற்கு ரூ.59,400 பணமானது 6.6% வட்டி விகிதத்தில் கிடைக்கும்.
வேலூர், திருப்பத்தூர் உட்பட 16 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!
இந்த முதலீட்டின் மெச்சூரிட்டி 5 வருடங்களுக்குப் பிறகு முடியும். அவ்வாறு முடியும் போது முதலீட்டாளர்கள் முதலீடு செய்த தொகை அப்படியே அவர்களுக்கு கிடைக்கும். தனிநபராகவும் இந்த கணக்கை தொடரலாம். அவ்வாறு தொடர 4.5 லட்சம் முதலீடு செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தினால் அதற்கு தகுந்தாற்போல் மாத வருமானம் வரும். இது மிகவும் பாதுகாப்பான முதலீடு என்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.