SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – Fixed Deposit வட்டியில் புதிய மாற்றம்!
நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பாரத ஸ்டேட் வங்கி, அதன் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதாவது, உள்நாட்டு மொத்த கால வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளதாக தெரிவித்து உள்ளது. இது அறிவிப்பு தொடர்பான முழு விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
வட்டியில் புதிய மாற்றம்:
கடந்த பிப்ரவரி மாதம், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBIத் தவிர, நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கியும், பிக்சட் டெபாசிட்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வட்டி விகிதத்தை உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி (SBI) ரூ.2 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட உள்நாட்டு மொத்த கால வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை தற்போது உயர்த்தியுள்ளது. இந்த புதிய விகிதங்கள் இன்று மே 10, 2022 முதல் அமலுக்கு வருவதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? குழப்பத்தில் அரசு ஊழியர்கள்!
SBI வங்கி உள்நாட்டு மொத்த கால வைப்புகளுக்கு 3.00 சதவீத வழக்கமான வட்டி விகிதத்தை வழங்குகிறது. 2 கோடி மற்றும் அதற்கு மேல் உள்ள டெபாசிட்டுகள் 7 முதல் 45 நாட்களில் முதிர்ச்சியடையும் என்பதாகும். முன்னதாக 46 முதல் 179 நாட்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 3% வட்டி விகிதத்தை வங்கி வழங்கியது, ஆனால் தற்போது 3.5 சதவீதமாக வழங்க உள்ளன, அதாவது அடிப்படை புள்ளிகள் 50 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 3.1 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக (40 அடிப்படை புள்ளிகள் உயர்வு) அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் 211 நாட்களில் முதிர்ச்சியடையும் ஒரு வருடத்திற்கும் குறைவான கால டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 3.3 சதவீதத்தில் இருந்து 3.75 சதவீதமாக (45 அடிப்படை புள்ளிகள் உயர்வு) உயர்த்தப்பட்டுள்ளது. இதை அடுத்து ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 3.6 சதவீதத்தில் இருந்து 4% ஆக வங்கி உயர்த்தியுள்ளது, அதாவது 40 அடிப்படை புள்ளிகள் அதிகரிப்பு ஆகும்.
Exams Daily Mobile App Download
இரண்டு வருடங்களில் இருந்து மூன்று வருடங்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு,4.25 சதவீத விகிதத்தை வழங்க உள்ளன. முன்னதாக வட்டி விகிதம் 3.6 சதவீதத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 3 முதல் 5 ஆண்டுகளில் முதிர்ச்சி அடையும் வைப்புகளுக்கான வட்டி விகிதம் மற்றும் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளில் முதிர்ச்சி அடையும் வைப்புகளுக்கான வட்டி விகிதம் 3.6 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.