வீட்டு வேலை செய்பவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் – மாநில அரசின் திட்டம்!!
சமீப காலமாக ஊழியர்களின் பணிக்கு ஏற்ற சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றது. இதற்காக மேற்கு வங்க அரசு புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்த உள்ளது.
ஊதிய நிர்ணயம்:
வீட்டு வேலை செய்பவர்களுக்கு அவர்கள் பார்க்கும் பணியை விட மிகவும் குறைவான சம்பளம் மட்டுமே வழங்கப்படுவதாக பல காலமாக புகார்கள் இருந்து வந்தது. இவை அரசின் கவனத்திற்கு வர வேண்டும் என்றும் பணியாளர்கள் போராடி வந்தனர். இந்நிலையில், மேற்கு வங்க அரசு வீட்டு பணியாளர்கள் குறைந்தபட்ச ஊதியச் சட்டம், 1948 ன் படி ஊதியம் நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது.
ரேபிஸ் நோய் பாதிப்பு உயர்வு – WHO வெளியிட்ட அறிக்கை… மாநில சுகாதாரத்துறையின் முக்கிய உத்தரவு!
Exams Daily Mobile App Download
இதற்கான அறிவிப்பு கடந்த 22ம் தேதி அன்று வெளியானது. மேலும், இதன் மூலம் இப்பணியினை செய்யும் 2.5 லட்சம் பேர் பலனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வீட்டு பணியாளர்கள் அவர்கள் செய்யும் பணி மற்றும் நேரத்தை பொறுத்து ஊதியம் பெறுவதற்கான வழிசெய்யப்படும் என்றும், மாதத்தில் 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த புதிய திட்டமான குறைந்த பட்ச ஊதிய நிர்ணய விதியானது அலுவலகத்தில் இப்பணிகளை செய்பவர்களுக்கு மட்டும் தான் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.