2021- 2022 நிதி ஆண்டில் இந்தியா 12.8% வளர்ச்சி அடையும் – தரமதிப்பீடு நிறுவனம் ஆய்வு!!
காரணம்:
2020ம் ஆண்டின் பின்பகுதியில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார தடைகள் விலக்கப்பட்டது. இதனால் பொருளாதார வளர்ச்சி வேகமாக இருந்தது. நாட்டின் நிதி நிலைமையை அரசு சார்பில் மிகவும் முறையாக கையாண்டிருந்தனர். மத்திய அரசு சில முக்கிய துறைகளில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றத்தில் சென்றது.
பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தேதிகள் – மாநில அரசுகள் அறிவிப்பு!!
நிதி வளர்ச்சி:
கொரோனா தொற்றினால் நாட்டின் பொருளாதாரம் கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத வகையில் சரிவடைந்தது. இதனால் நாட்டின் நிதி நிலையை சரி செய்ய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது. ஜி-20 நாடுகளில் அதிக வளர்ச்சி அடைந்திருப்பது இந்தியா மட்டும் தான்.
நிதி ஆய்வு:
அடுத்த நிதி ஆண்டில் நாட்டின் வளர்ச்சி 11% ஆக இருக்கும் என்று ஃபிட்ச் நிறுவனம் கணித்துள்ளது. இந்தியாவை போல் துருக்கியும் வேகமாக வளர்ச்சி அடையும் நாடுகள் பட்டியலில் வைத்திருந்தது. எதிர்பார்த்ததை விடவும், நாட்டின் நிதி நிலைமை மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்ததால் 11% இல் இருந்து 12.8% ஆக நிதியாண்டில் வளர்ச்சி இருக்கும் என்று ஃபிட்ச் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்